"பிளைட்டுக்கும் ஆம்னி பஸ்க்கும் ரூ.200 தான் டிக்கெட் வித்தியாசம்" - கொதிக்கும் பயணிகள்

x

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு விமானத்திலேயே சென்று வந்து விடலாம் என, தனியார் ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்வதற்கான டிக்கெட் கட்டணம், 2 மடங்கு உயர்ந்துள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வழக்கமாக 900 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை உள்ள டிக்கெட் கட்டணம், தற்போது 3 ஆயிரம் வரை உயர்ந்துள்ளதாகவும், இதற்கு முன்கூட்டியே பதிவு செய்திருந்தால், விமானத்திலேயே பயணம் செய்திருக்கலாம் எனவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்