தி.நகரின் பிரபல நகைக்கடை மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் - அதிர்ச்சி சம்பவம்

x

சென்னை, திநகரில் உள்ள பிரபல நகைக்கடையில் 10 சவரன் நகைகளை வாங்கி விட்டு செக் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, வளசரவாக்கத்தை சேர்ந்த மாதவன் என்பவர், கடந்த மாதம் 19 ஆம் தேதி தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் சுமார் 5 லட்ச ரூபாய்க்கு 10 சவரன் நகைகளை வாங்கியுள்ளார். மாதவன் கொடுத்த காசோலையை கடை ஊழியர்கள் வங்கியில் செலுத்தியபோது, செக் பவுன்சாகியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த கடை மேலாளர் மாதவனிடம் நேரில் சென்று கேட்டபோது, அவர் கத்தியை காட்டி மிரட்டிய நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த வளசரவாக்கம் போலீசார், செக் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த மாதவனை கைது செய்து விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்