"இது நிரந்தரத் தீர்வு கிடையாது"..ஆவேசமாக பேசிய சீமான்

x

சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய்க் கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார். மணலியில் இயங்கி வரும் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் எண்ணெய்க் கழிவுகள், மழைநீருடன் கலந்து சத்தியமூர்த்தி நகர், ஜோதி நகர், கிரிஜா நகர், எர்ணாவூர் உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 5 வீடுகளுக்குள் எண்ணெய்க் கழிவுகள் புகுந்து உடைமைகளை சேதப்படுத்தி உள்ளது. எண்ணெய்க் கழிவுகள், கடலில் கலந்துள்ளதால், கடல் நீர் மாசுபட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை சீமான் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்