இது புதுசா இருக்கு அண்ணே! காய்கறிகளுடன் கல்யாண பத்திரிக்கை.. - மகிழ்ச்சியில் சொந்த பந்தங்கள்...

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், மகளின் திருமணத்துக்கு காய்கறிகளுடன் திருமண அழைப்பிதழ் கொடுத்த பெற்றோரின் செயல் வரவேற்பை பெற்றது. பங்களா மேடு பகுதியைச் சேர்ந்த பாபு - குணசுந்தரி தம்பதியின் மகள் கீர்த்தனா தேவிக்கு, வரும் 20ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக, தக்காளி, வெங்காயம், பூண்டு உள்ளிட்ட காய்கறிகளுடன் பாபு - குணசுந்தரி தம்பதி தங்களது உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கினர். இது தொடர்பான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்