திருத்தணி முருகன் கோவில் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

x

கடந்த 4ம் தேதி 'மிக்ஜாம்' புயல் காரணமாக திருத்தணி முருகன் கோவிலின் மலைப்பாதையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக கனரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தொடர்ந்து மலைப்பாதை சீரமைப்பு பணிகள் தொடங்கியதால், பக்தர்கள் நடந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், 70 சதவீத சீரமைப்பு பணிகள் முடிந்ததால், பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு மட்டும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. கிருத்திகை தினம் என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்