இலவசமாக பெட்ரோல் கேட்டு வாக்குவாதம்..பங்க் ஊழியர் மீது கொடூர தாக்குதல் - பதறவைக்கும் காட்சிகள்

x

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், இலவசமாக பெட்ரோல் கேட்டு பெட்ரோல் பங்க் ஊழியரை இருவர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நடந்த இந்த சம்பவத்தில், பங்க் ஊழியர் சங்கர் என்பவரை இருவர் ஆபாச வார்த்தையில் திட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், எஸ். அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த பில்லா, பெருமாள் மற்றும் ராதா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் குறித்தான பெட்ரோல் பங்கின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்