யாரு நீ... வெளியே போ நீ முதல.. ஆபாச வார்த்தையில் திட்டி தாக்கிய அதிகாரி.. வெளியான அதிர்ச்சி வீடியோ

x

திருப்பூர், தென்னம்பாளையத்தில் உள்ள உழவர் சந்தையில் கடந்த 10 ஆண்டுகளாக காய்கறி கடை நடத்தி வருபவர் விவசாயி கன்னிமுத்து. இவர் உழவர் சந்தை அலுவலர் மணிவேலிடம் சென்று.. சில விவசாயிகள் வெளியில் இருந்து பொருட்களை வாங்கி சந்தையில் விற்பனை செய்வதாகவும், இதனால் நேரடி முறையில் விவசாய பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கூறி முறையிட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், கன்னிமுத்துவிற்கும், மணிவேலிற்கும் இடையே தகராறானது . தகராறில், கன்னிமுத்துவின் கடையை உழவர் சந்தையில் இருந்து அகற்றுமாறு கூறிய மணிவேல், அவரை தகாத வார்த்தைகள் கூறி திட்டித் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான வீடியோ வெளியாகி பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்