கோளாறாக வந்த ஆட்டோ-தப்பிக்க நினைத்து வளைந்த பைக்-ஒரு நொடியில் நடந்த விபரீதம்

x

பல்லடம் அருகே இருசக்கர வாகன விபத்தில், கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காளிவேலம்பட்டியில் திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர், எதிர்த் திசையில் வந்த ஆட்டோ மீது மோதமாமல் இருக்க வாகனத்தை வலதுபுறம் திருப்பியபோது, மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காயமடைந்த வெள்ளக்கோயிலைச் சேர்ந்த கல்லூரி மாணவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த விஷால் என்ற இளைஞர் லேசான காயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய இரு இளைஞர்களும், ஆட்டோ ஓட்டுனரும் தலைமறைவாகி விட்டதால் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்