மலையேறி கோயில் உண்டியலை அலேக்காக தூக்கிய திருடர்கள்

x

திருத்தணி அருகே கோயில் உண்டியலை திருடி சென்ற ஆந்திர வாலிபரை, போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம் மலையிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மர்மநபர்கள் உண்டியலை திருடி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், உண்டியல் திருட்டில் ஈடுபட்ட ஆந்திரவை சேர்ந்த அன்சர் அலி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து உண்டியலில் பக்தர்கள் செலுத்திய நகையை பறிமுதல் செய்துள்ள போலீசார், திருட்டில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்