"தனியார் ஆஸ்பத்திரில முதலுதவி கூட பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாங்க" - கண்ணீர் விட்டு கதறும் தந்தை

x

சென்னை மணலி மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது இரண்டு வயது பெண் குழந்தை லட்சுமி, கொசு மருந்து திரவத்தை வாயில் வைத்து உறிஞ்சியுள்ளது. இதனைக்கண்ட குழந்தையின் தாய் கொசு மருந்து திரவத்தை பிடுங்கிய நிலையில், குழந்தையின் வாயில் இருந்து நுரை வர தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை லட்சுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகளில் குழந்தைக்கு முதலுதவி அளிக்க மறுக்கப்பட்டதாகவும், முதலுதவி அளிக்கப்பட்டிருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் எனவும், உயிரிழந்த குழந்தையின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்