"டாஸ்மாக்கில் போலி மது... வாய்ப்பே இல்லை.." அமைச்சர் முத்துசாமி

x

டாஸ்மாக் கடைகளில் போலி மது விற்பனை இல்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுதானிய உணவுத் திருவிழாவை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். இங்கு வேளாண்மை, சித்த மருத்துவம், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் சார்பில் 16 அரங்குகள் அமைத்து, கம்பு, சோளம், திணை, குதிரைவாலி, கேழ்வரகு, ராகி உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதனை பார்வையிட்ட அமைச்சர் முத்துசாமி, உணவுகளை சுவைத்து பார்த்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாஸ்மாக் கடைகளில் போலி மது விற்பனை இல்லை என்பதை உத்தரவாதமாக கூற முடியும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்