"இவர்களின் வாழ்க்கை முகாம்களிலேயே முடிந்துவிடும்" | NGO Chennai

x

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் சென்னை பெங்களூரு அணிகள் மோதிய போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதனைக் காண, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 40 மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொண்டு நிறுவனம் செய்த‌து. மாணவர்களுக்கு, அவர்களுக்கு பிடித்த கால்பந்து அணியின் டி-சர்ட், உணவு உள்ளிட்டவை வழங்கி, போட்டியை நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்முறையாக கால்பந்து போட்டியை மைதாத்திற்கு சென்று நேரில் பார்த்த‌து மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்