இரவு நேரங்களில் மணல் திருட்டு - பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளில் கொள்ளை

x

இரவு நேரங்களில் மணல் திருட்டு - பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளில் கொள்ளை

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் ஏரியில், இரவு நேரங்களில் கனிம வளம் கொள்ளையடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

மணிமங்கலம் ஏரியில், நள்ளிரவில் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளுக்கு மண் நிரப்பப்படுகிறது.

மணிமங்கலம் காவல் நிலையம் அருகே கனிம வள கொள்ளை நடைபெறுவதால், காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கனிம வள கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்