தேன் கூட்டில் கல்லெறிந்த இளைஞர்கள்... மாணவிகளை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்

x

திருச்சி மாவட்டம் முசிறி அருகே விரட்டி விரட்டி தேனீக்கள் கொட்டியதில் அரசு பள்ளியை சேர்ந்த 5 மாணவிகள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். பள்ளி அருகே மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் மீது இளைஞர்கள் சிலர் கல்லெறிந்ததாக தெரிகிறது. இதனால் கூட்டில் இருந்து கிளம்பிய தேனீக்கள் அவ்வழியாக சென்ற பள்ளி மாணவிகளை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் காயம் அடைந்த மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்