"என்ன உள்ள வச்சு அடிச்சாங்க"...போதையில் ஸ்டேஷனில் ரகளை செய்த இளைஞர்...வெளியான பரபரப்பு காட்சிகள்

x

பல்லாவரத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு மது போதையில் வந்த இளைஞர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சங்கர் நகர் காவல் நிலையத்தில் புதிதாக பல்லாவரம் மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைப்பதற்காக, தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் வருகை தந்திருதார். அந்த காவல் நிலையத்திற்கு மது போதையில் வந்த இளைஞர், பம்மல் பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு வந்த காவலர்கள் அவரை தாக்கியதாகவும், அவரிடமிருந்து செல்போனை பறித்துச் சென்றதாகவும் கூறினார். மேலும், போலீசார் குறித்து அவதூறாக பேசியதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்