கிராம சபை கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு | grama sabha | Tirupathur

x

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே போயர் இன மக்கள் பன்றி வளர்ப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, கிராம சபை கூட்டத்தில் இளைஞர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் பேசிய ஏரியூரைச் சேர்ந்த இளைஞர் மாரியப்பன், பன்றி வளர்க்கும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, தான் மறைத்து வைத்திருந்த டீசலை தலை மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை காப்பாற்றி அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்