வெளிநாட்டில் இருந்து வந்த பணம்..வேறொருவருடன் உல்லாசமாக இருந்த மனைவி..பார்க்கக்கூடாததை பார்த்த கணவர்

x

கொல்லங்கோடு அருகே கச்சேரிநடை பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவர், வெளிநாட்டில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், காக்கவிளை பகுதியை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் இடையே, கடந்த 2016ம் ஆண்டு திருமணமானது.

பின்னர் 4 மாதம் கழித்து வெளிநாட்டிற்கு சென்ற ஷாஜி, ஒன்றரை ஆண்டுகள் கழித்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வெளிநாட்டில் சம்பாதித்து மனைவியிடம் அனுப்பிய பணத்திற்கான கணக்கை ஷாஜி கேட்க, அதற்கு அனிஷா மழுப்பலான பதில் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

இதனிடையே, மாமியார் வீட்டிற்கு சென்ற ஷாஜி, மனைவியை சேர்ந்து வாழ அழைத்தபோது, அவர் மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஷாஜி நாகர்கோவிலில் குடும்பநல நீதிமன்றத்தில் தனது மனைவியை சேர்த்து வைக்குமாறு வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், கணவருக்கே தெரியாமல் வேறொரு நபரை அனிஷா திருமணம் செய்யும் வீடியோவைக் கண்டு ஷாஜி அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக அவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்