கடமையை செய்ய வந்த விஏஓ - புரட்டி எடுத்த கும்பல் - சிவகங்கையில் பரபரப்பு

x

சிவகங்கை மாவட்டம் ஏனாவரம் புதுப்பட்டி பகுதியில் மணல் கொள்ளை நடப்பதாக தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அதிகாரி சேகர் அதனை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் சேகர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதில் சேகர் பலத்த காயமடைந்த நிலையில் உதவியாளர் சவிதா அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்