மனைவிக்கு வளைகாப்பு நடத்த முடியாத விரக்தியில் உயிரை மாய்த்த கோயில் குருக்கள்

x

சென்னை கே.கே.நகரில், மனைவியின் வளைகாப்பு, தந்தையின் மருத்துவ செலவிற்கு பணம் கிடைக்காத விரக்தியில் கோவில் குருக்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கே.கே நகர் 10 வது செக்டார் தெருவை சேர்ந்த வினோத் முத்துமாரியம்மன் கோவிலில் குருக்களாக இருந்து வந்தார். வினோத்தின் மனைவி கலைவாணி 8 மாத கர்ப்பிணியாக உள்ளதால் 10 நாட்களுக்கு முன்பு அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் வினோத் அவரது மனைவி கலைவாணியை தொடர்பு கொண்டு வாழ பிடிக்கவில்லை எனவும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இதனால் கலைவாணி உடனே உறவினர் ஒருவருக்கு தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்த போது வினோத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கே.கே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் வினோத், மனைவி கலைவாணிக்கு வளைகாப்பு மற்றும் தந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாததால்,




Next Story

மேலும் செய்திகள்