கண்ணீர் மல்க மாணவி வைத்த கோரிக்கை.. மீண்டும் வந்த ஒளி.. அமைச்சரின் நெகிழ வைக்கும் செயல்

x

மயிலாடுதுறையைச் சேர்ந்த மாணவிக்கு அரசு சார்பில் செயற்கை கால்களை, அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். சீர்காழியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி அபிநயா, ரத்த பாதிப்புக்குள்ளாகி அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு கால்களை இழந்தார். இதனால், உயர் சிகிச்சை மேற்கொள்ள முடியாததால், தனக்கு உதவி செய்யக் கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, மாணவிக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அரசு சார்பில் அபிநயாவிற்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்