வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம்.. உள்ளே சென்று பார்த்தால்... கோவையை உலுக்கி போட்ட சம்பவம்.

x

கோவையில் தற்கொலை செய்து கொண்ட மகன் பிணத்துடன் மூதாட்டி 3 நாளாக இருந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆவாரம்பாளையம் ஸ்ரீவல்லி நகர் பகுதியை சேர்ந்தவர் சிபி சுப்பிரமணியம். இவருக்கு திருமணமாக வில்லை. இவரது தாயார் வசந்தா மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், சிபி சுப்பிரமணியம் தாயாரை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது வீட்டின் கதவு சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததுடன், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது, சிபி சுப்பிரமணியம் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி பிணமாக இருந்துள்ளார். மேலும், மனநிலை பாதிக்கப்பட்ட வசந்தா மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதையடுத்து, மூதாட்டியை மீட்டு மருத்துவனையில் அனுமதித்த போலீசார், சடலத்தை மீட்டு தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்