மாமியாரை துடிதுடிக்க அடித்து கொன்ற மருமகன்... சென்னையில் அரங்கேறிய பயங்கரம்

x

சென்னை மாதவரத்தில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், மாமியாரை அடித்துக் கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர். மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வரும் புஷ்பராஜ் என்பவர், வேலைக்கு செல்லாமல் மதுபோதையில், தனது மனைவி ஜான்சியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இவர்களது வீட்டில், ஜான்சியின் தாய் வசந்தி என்ற மூதாட்டியும் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், மதுபோதையில் மீண்டும் வீட்டிற்கு வந்த புஷ்பராஜ், தனது மாமியார் வசந்தியிடம் தகராறு செய் ததுடன், ஆத்திரத்தில் அவரை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்