கை நழுவிய மறுநொடி கட்டிங் மிஷினால் அறுந்த கழுத்து.. பறிபோன உயிர்

x

சென்னை நீலாங்கரையில் வேலை செய்யும்போது கை நழுவி கட்டிங் மிஷின் கழுத்துப் பகுதியை அறுத்ததால் பரிதாபமாக கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... செல்வம் என்ற 44 வயது கூலித் தொழிலாளி நீலாங்கரை வைத்தியலிங்கம் சாலையில் உள்ள பழைய பொருட்கள் விற்கும் கடையில் வேலை செய்து வந்துள்ளார்... பிளாஸ்டிக் டிரம்மின் மேல் மூடியை கட்டிங் மிஷினை கொண்டு அறுத்து கொண்டிருந்த போது கை நழுவி கட்டிங் மிஷன் செல்வத்தின் கழுத்துப் பகுதியை அறுத்துள்ளது... இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்