குழந்தை கடத்தல் தீயாய் பரவிய வதந்தி..! சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

x

மேடவாக்கம் பகுதியில் குழந்தைகள் கடத்தல் நடைபெறுவதாக வதந்தி பரப்பப்பட்ட விவகாரத்தில், நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அண்மையில் மேடவாக்கம் பகுதியில் 7 குழந்தைகள் கடத்தப்பட்டதாகவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமெனவும் காணொலி பரவியது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தகவல் வதந்தி என போலீஸில் புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில், அவ்வாறு பரப்பியவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, வதந்தி பரப்புவோர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்