"சென்னை கத்திப்பாரா போன்று சாலை அமைக்கப்படும்" திருச்சி மேயர் வெளியிட்ட தகவல்

x

திருச்சியில், பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே, சென்னை கத்திபாராவை போல், சுற்றுப்புறச் சாலை அமைவதற்கான திட்டம், இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று திருச்சி மாநகராட்சி மேயர் மேயர் அன்பழகன் கூறினார். வருடத்தின் முதல் மாமன்ற கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் ஒரு சில மாதங்களில் திறக்கப்படும் என்றும், அதன் பிறகு திருச்சி மாநகராட்சியில் போக்குவரத்து குறையும் என்றும் கூறினார்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலைத் துறை அனுமதியுடன், சென்னை கத்திபாராவைப் போல் சுற்றுப்புற சாலை அமைவதற்கான திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்