மதுபிரியர் கேட்ட கேள்வி - கொந்தளித்த ஊழியர்கள்" - என்னடா கேட்ட..?"

x

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை காவல் நிலையம் அருகே, இரண்டு டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள பார்களில் 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மேப்பூர் பகுதியை சேர்ந்த ரகு என்பவர், மதுபானம் அதிக விலைக்கு விற்பனை செய்ததை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, Bar ஊழியர்கள் உருட்டு கட்டையால் தாக்கியதில், ரகு காயமடைந்தார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், புகாரின் பேரில் பார் ஊழியர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்