பொதுத்தேர்வுஎழுதும் மாணவர்களுக்கு.. "விவரங்களில் தவறு இருந்தால்.." - அரசுத் தேர்வுத்துறை இயக்குநர்

x

2023-24-ஆம் கல்வி ஆண்டிற்கான 10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிப்பதற்காக, EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்கள் வழங்கப்பட உள்ளது. இந்த தகவல்களை பயன்படுத்தி பட்டியல் தயார் செய்யப்படவுள்ளது. எனவே மாணவர்களின் தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து, திருத்தங்கள் இருந்தால் அவற்றை உடனே சரி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 30-ஆம் தேதிவரை இதற்கான பணிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், மாணவர்களின் விவரங்களில் தவறு இருந்தால் சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரே முழுப்பொறுப்பு ஏற்க நேரிடும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா, கல்வித்துறை அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்