தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற நபர்! ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர்! தேனியில் நடந்த பயங்கரம்

x

வருசநாடு அருகே கீழபூசனூத்து கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற முதியவரும், சதீஷ்குமார் என்பரும், அதே பகுதியில் உள்ள ரேஷன் கடை வளாகத்தில் இரவு நேரத்தில் படுத்து உறங்கி வந்துள்ளனர். ரேஷன் கடை வளாகத்தில் உறங்குவது தொடர்பாக இந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தில் இருந்து வந்த சதீஷ்குமார், ரேஷன் கடை வளாகத்தில் படுத்து உறங்கிய முதியவர் லட்சுமணனின் தலையில் கல்லைப் போட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், தலைமறைவாக சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்