பெயிண்ட் அடித்து கொண்டிருக்கும் போதே பிரிந்த பெயிண்டர் உயிர்

x

பெயின்டிங் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவர் இர்பான் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பெயின்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சுவர் பக்கவாட்டில் இருந்த மின் கம்பத்தில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்