மருத்துவமனை குப்பையில் வீசப்பட்ட முதியவர்-அசையக்கூட தெம்பில்லாமல் போராடிய உயிர் | Tiruppur

x

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆதரவற்ற முதியவர் குப்பையில் வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவருக்கு உள் நோயாளி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரைக் காண உறவினர்கள் யாரும் வராததால், ஊழியர்கள் அந்த அப்பாவி முதியவரை வீல் சேரில் கொண்டுவந்து பிணவறை காம்பவுண்ட் சுவர் வெளிப்பகுதியில் உள்ள சாலையில் குப்பையோடு குப்பையாக வீசி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்க, மழையில் நனைந்தபடி முதியவர் நடுங்கிக் கொண்டே உயிருக்கு போராடிய நிலையில், நாய்களும் அவரைச் சுற்றி குரைத்துக் கொண்டிருந்தன... போதாத குறைக்கு அவர் மீது மருத்துவ கழிவுகளும் கிடந்தன. இவ்வளவு தூரம் மனிதம் மரித்து விட்டதா என பலரையும் வேதனையடையச் செய்து விட்டது அந்தப் பரிதாப காட்சி...


Next Story

மேலும் செய்திகள்