செயல்படாமல் இருந்த ரேசன் கடை.. "என்னைய பழைய மூர்த்தியா மாத்திடாதீங்க" - அமைச்சர் காட்டம்

x

மதுரை வளர்நகர் பகுதியில் ரேசன் கடையை ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி என்னை பழைய மூர்த்தியாக விட்டுவிடாதீங்க என்று, அதிகாரிகளிடம் காட்டமாக பேசினார். மதுரை வளர்நகரில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த ரேசன் கடையை அவர் பார்வையிட்டார். அப்போது கோபம் அடைந்த அமைச்சர், பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு போனில் பேசினார். அப்போது 10 ஆண்டிற்கு முன்னால் கட்டிய கட்டிடம் எப்பவோ கட்டிய கட்டிடம் மாதிரி இருக்கு என்று கூறினார். என்ன செய்வீர்களோ, இதை உடனே சீர் செய்ய வேண்டும் என்றும், என்னை பழைய மூர்த்தியாக விட்டு விடாதீர்கள் என்றும் காட்டமாக பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்