உணவகத்தில் கேட்ட சத்தம்.. ஜன்னல்களில் வெளியேறிய கரும்புகை.. சென்னையில் அதிர்ச்சி

x

#Chennai #vadapalani #hotel #gascylinder #blast #thanthitv

சென்னை வடபழனியில் உள்ள உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. பார்வதி என்பவருக்கு சொந்தமான உணவகத்தில், சமையல் அறையில் ஊழியர் அடுப்பை பற்ற வைத்தபோது திடீரென கேஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஊழியர்கள், பதறியடித்தபடி வெளியேறினர். அடுத்தடுத்து 2 சிலிண்டர்கள் வெடித்ததால், தீயானது உணவகம் முழுவதும் பரவியது. தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் உணவகத்தில் இருந்த பொருட்கள் நாசமாகின.


Next Story

மேலும் செய்திகள்