ஆன்லைன் மூலம் போதை மாத்திரை... பொடியாக்கி பயன்படுத்திய இளைஞர்கள் - அடுத்து நடந்த ட்விஸ்ட்

x

அந்தியூர் அடுத்துள்ள தவிட்டுப்பாளையம் பகுதியில், இளைஞர் சிலர் தொடர்ந்து போதையில் தகராறு செய்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இதனால், அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றி திரிந்த ஐவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஐவரும் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி, பொடியாக அரைத்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இளைஞர்களிடம் இருந்து சுமார் ஒரு லட்சம் மதிப்பில் ஆயிரக்கணக்கான மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், ஐவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்