பேப்பரை காண்பித்து செல்போனை ஆட்டைய போட்ட மர்ம நபர்... CCTVயில் சிக்கிய பலே ஆசாமி

x

யாசகம் கேட்பது போல் வந்து அலுவலகத்தில் லாவகமாக செல்போனைத் திருடிச் சென்ற மர்ம நபரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஓசூர் மாநகராட்சி சார் பதிவாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ள முத்திரை தாள் விற்பனை அலுவலகத்தில் கலைவாணி என்ற பெண் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தன்னால் வாய் பேச முடியாது என கூறி சில காகிதங்களைக் கலைவாணியிடம் காண்பித்த மர்ம ஆசாமி, லாவகமாக கலைவாணியைத் திசை திருப்பி, மேசையில் இருந்த செல்போனை லாவகமாகத் திருடிச் சென்றார். இந்தக் காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவான நிலையில், காவல்துறையினர் திருடனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்