ஊரையே கதிகலங்க வைத்த முகமூடி கொள்ளையர்கள் - காத்திருந்து வேட்டையாடிய போலீஸ்

x

சிவகங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய முகமூடி கொள்ளையர்கள் 6 பேரை, தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே இரவு நேரங்களில் முகமூடி கொள்ளையர்களின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன. கடந்த ஜூலை மாதம் காளையர் கோயில், கேகே நகரில் வசித்து வந்த முதியவர் செல்வராஜ் என்பவரின் வீட்டில், தொடர்ந்து இரு முறை கும்பல் கொள்ளையடிக்க முயன்றதும், முதியவரை கத்தியால் தாக்கியதும் சிசிடிவியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் முகமூடி கொள்ளையர்கள் 6 பேரை கைது செய்துள்ள நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்