#Breaking||தன் நிலத்தை வாங்கி அதிக விலைக்கு விற்றதால் பத்திரப் பதிவு ஆபிஸ் முன் தீக்குளித்த நபர் பலி

x
  • மதுரையில் விற்பனை செய்த இடத்தை மற்றொருவர் அதிக விலைக்கு பத்திரப்பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரவித்து பத்திரப்பதிவு அலுவலகம் முன் தின்னர் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
  • மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் அருகே எருக்கலை நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (50)கூலித் தொழிலாளியான இவர் அவருக்கு சொந்தமான 14 சென்ட் நிலத்தை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கனகவேல் என்பவரிடம் அடமானம் வைத்துள்ளார்.பொருளாதார ரீதியான பிரச்சனையால் நிலத்தை மீட்க முடியாத நிலையில் அதனை கனகவேலிடமே சில மாதங்களுக்கு முன்பு விற்பனை செய்துள்ளார்.இதையடுத்து மாதவனின் இடத்தினை கனகவலே் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யவுள்ளதை அறிந்து இடத்தினை மீண்டும் கனகவேலிடம் கேட்டுள்ளார்.கனகவேல் தர மறுத்து நேற்று வேறொரு நபருக்கு விற்க ஊமச்சிகுளம் பத்திரப்பதிவு அலுவலகம் வந்தார்.
  • இந்நிலையில் அங்கு சென்ற மாதவன் திடிரென பத்திரப்பதிவு அலுவலகம் முன் தின்னரை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
  • இதில் காயமடைந்த மாதவனை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
  • 95 சதவித தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • இது குறித்து ஊமச்சிகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்