"புருஷனுக்கு 50 வயசு கூட ஆகலயே..கொலைகாரன வேலைக்கு வச்சிருக்கான்..ஊர் தலைவன் வந்து பதில் சொல்லணும்"

x

#Nellai

"புருஷனுக்கு 50 வயசு கூட ஆகலயே..கொலைகாரன வேலைக்கு வச்சிருக்கான்..ஊர் தலைவன் வந்து பதில் சொல்லணும்" - பானிபூரிக்காரர் மனைவி கொதிப்பு

நெல்லை மாவட்டம் சாத்தான்குளம் அருகே, பானி பூரி விற்பனை செய்து வந்தவர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது. கொலை வழக்கில் அதே பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப் ஊழியரான இம்ரான் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தான் பணிப்புரிந்து வந்த மருந்தகத்தில் கொலை செய்யப்பட்ட மீரான் மருந்து, மாத்திரைகள் வாங்கி ஆயிரம் ரூபாய் வரை கடன் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கடனை கேட்க சென்றபோது ஏற்பட்ட தகராறால், அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.


Next Story

மேலும் செய்திகள்