தூக்கிய பாம்பன் ரயில் பாலம் - அணிவகுத்து நின்ற படகுகள் - பிரம்மிப்பில் படம் பிடித்த சுற்றுலா பயணிகள்

x

பாம்பன் தூக்கு ரயில் பாலம் தூக்கப்பட்ட நிலையில், விசைப்படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்றன. ராமேஸ்வரம் தீவையும், மண்டபம் நிலப்பரப்பையும் இணைப்பதில் ரயில் பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்து வந்த மீனவர்கள், தெற்கு பகுதிக்குச் செல்ல வேண்டி, ரயில் பாலத்தை தூக்க வேண்டுமென துறைமுக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள், பாலத்தை தூக்கிய பின்னர், விசைப்படகுகள் அணிவகுத்துச் சென்றன. இதனை ஏராளமானோர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்