காதலன் வீட்டில் காலடி வைத்த மறுநொடி.. கடைசி சிரிப்பு.. - மதுரையே நடுங்க பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

x

மதுரை மாவட்டம், கடவூர் கிழக்கு தெருவை சேர்ந்த சின்னக்காள் என்பவரும், அதே உரைச் சேர்ந்த உறவினரான பாக்கியம் என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, காதலி சின்னக்காளை பாக்கியம் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு பாக்கியத்தின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள், சின்னக்காளை அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சின்னக்காள்,

வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், இறந்த பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், காதலன் பாக்கியம் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினர் 7 பேரை கைது செய்ய வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து இளம்பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்