காதலன் கண்முன்னே பிரிந்த காதலி உயிர்... சென்னையில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்

x

சென்னை போரூர் குயப்பேட்டை பகுதியை சேர்ந்த பவித்ரா என்பவர் மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்த வினோத் என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கல்லூரி முடித்துவிட்டு பவித்ராவை வினோத் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் பவித்ராவின் தலை மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் காதலன் கண்முன்னே காதலி துடிதுடித்து பலியானார். வினோத் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்