பள்ளிக்கு சென்ற மாணவி - காவு வாங்கிய காற்று - பெற்றோர் தலையில் விழுந்த பேரிடி

x

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பள்ளி வளாகத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 10ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

அய்யம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது, பசுபதி கோயில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த

மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்த்து. இதில், சுஷ்மிதா, ராஜேஸ்வரி ஆகிய இரண்டு மாணவிகள், அந்த மரத்தின் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். உடனடியாக, இரு மாணவிகளும் மீட்கபட்டு, அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சுஷ்மிதா செல்லும் வழியிலே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி, மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில்,

இறந்த மாணவிக்கு நிவாரணம் வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்