கனிமொழியால் உலகத்தை பார்த்த சிறுமி..! கண்கலங்கி நன்றி சொன்ன தாய் | Kanimozhi MP

x

தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர்-சொக்கப்பழங்கரை கிராமத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை திமுக எம்.பி. கனிமொழி கடந்த மாதம் பர்வையிட்டார். அப்போது, அப்பகுதியில் பார்வைக் குறைபாடுள்ள ரேவதி என்ற சிறுமியை சந்தித்த கனிமொழி, அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழியின் உதவியால் அந்தச் சிறுமிக்கு நெல்லையில் கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள சிறுமி, திமுக எம்.பி கனிமொழிக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் அவரை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்