வீடு புகுந்து பெண்ணை சீரழித்த கும்பல்... பாய்ந்தது குண்டாஸ்... ஆட்சியர் அதிரடி

x

சிவகங்கையில் வடமாநில தொழிலாளியின் மகளை வீடு புகுந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நான்கு இளைஞர்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள செங்க சூலையில் வட மாநில தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வந்தார். கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த வடமாநில தொழிலாளியின் மகளை, நான்கு இளைஞர்கள் வீடு புகுந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ரஞ்சித், கஜேந்திரன், அருண்குமார் மற்றும் ஆதித்யா என்ற நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், தற்போது நால்வர் மீதும் சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்