ஆபாச கோலத்தில் போட்டோ எடுத்து..ஷேர் செய்த நண்பன் கொலை..

x

ஆபாச கோலத்தில் போட்டோ எடுத்து..

ஷேர் செய்த நண்பன் கொலை..

#chennai #crimestory #thanthitv

ப்ரித்..

இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை எண்ணூர் போலீஸ் ஸ்டேசனுக்கு ஒரு போன் கால் வந்திருக்கிறது...

....டெலிபோன் ரிங்கிங்....

அன்னை சிவகாமி நகர் விளையாட்டு மைதானத்திற்கு பின்புறம் உள்ள குப்பை கூளங்களுக்கு மத்தியில் சில மனித எலும்பு கிடப்பதாக போனில் பேசிய நபர் தகவல் கொடுத்திருக்கிறார்.

ப்ரித்...

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அங்கு அடையாளம் தெரியாமல் உருகுலைந்து கிடந்த சடலத்தையும், எலும்புகளையும் சேகரித்து அதை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

சடலமாக மீட்கப்பட்டது யார்? நடந்தது கொலையா, தற்கொலையா? சடலம் இங்கு வந்தது எப்படி? போன்ற கேள்விகளுக்கு விடை தேடி போலீசார் அலைந்திருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக அதே காவல்நிலையத்துக்கு வந்திருந்த காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்திருக்கிறார்கள். புகார் அளித்தவர்களை ஒவ்வொருவராக அழைத்து, சடலத்தோடு கண்டெடுக்கப்பட்ட உடைகளை காட்டியிருக்கிறார்கள். அப்போது எண்ணூர் பகுதியை சேர்ந்த ஒருவர் காணாமல் போன தன்னுடைய அண்ணன் உடைகள் அவை என அடையாளம் காட்டியிருக்கிறார்.

போலீசார் இறந்தது யார் என கண்டுபிடித்துவிட்டார்கள். அதே சமயம் சடலத்தின் உடற்கூராய்வு அறிக்கையும் வெளிவந்திருக்கிறது. பின்பக்க தலையில் பலமாக தாக்கி கொலை செய்திருப்பதாக அட்டாப்சி ரிப்போர்டில் குறிப்பிட்டிருந்தனர்.

உடனே போலீசார் குற்றவாளிகளை தேடி விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

ப்ரித்..

கொல்லப்பட்டவர் கார்த்திக்.. 24 வயதாகிறது.. சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்தவர்.. வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டி வந்திருக்கிறார். இவருக்கு ஏரியாவில் ஏராளமான நண்பர்கள் உள்ளனர்.

இரவு, பகல் பாராது ஆட்டோ ஓட்டும் கார்த்தி விடுமுறை நாட்களில் அந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட் பகுதியின் ஓரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பதை வழக்கம். அப்படி தான் சென்ற மாதம் 16 ம் தேதி நண்பர்களுடன் வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. 24 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.

பிரீத்

போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் கார்த்திக்கின் செல்போனை அவரது நண்பர் காத்திகேயேன் என்பவர் வேறு ஒருவருக்கு விற்றிருப்பது தெரியவந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கார்த்திகேயனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் தான் அனைத்து உண்மைகளும் வெளிவந்திருக்கிறது.

பிரீத்

நண்பர்களோடு மது அருந்திய போது கார்த்திக்கேயன் போதையில் ஆடைகள் கலைந்து ஆபாசமாக கிடந்திருக்கிறார். அதை கார்த்திக் செல்போனில் போட்டோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி கிண்டல் செய்திருக்கிறார். அவமானத்தில் கூனி குறுகிய கார்த்திக்கேயன் இந்த நிலைமைக்கு காரணமான கார்த்திக்கை தீர்த்துகட்ட திட்டம் தீட்டியிருக்கிறார்.

பிரீத்

சம்பவத்தன்று வழக்கம் போல் நண்பர்கள் மது அருந்தியிருக்கிறார்கள். எல்லோருக்கும் போதை ஏறியிருக்கிறது. கார்த்திக்கேயனுக்கு மட்டும் கொலைவெறி தலைக்கேறியிருக்கிறது. மறைத்து வைத்திருந்த சுத்தியலால் கார்த்திக்கை அடித்தே கொலை செய்திருக்கிறார் கார்த்திக்கேயன்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கார்த்திக்கேயனையும், கொலைக்கு உடைந்தையாக இருந்த அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கேலி கிண்டல்கள் ஒரு எல்லையை மீறும் போது கொலை வரை சென்றுவிடுகின்றன என்பதை இந்த சம்பவம் உணர்த்தியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்