கடலூரில் பரபரப்பு... | ஒரே பள்ளியில் அடுத்தடுத்து... மாணவன், மாணவி தற்கொலை முயற்சி

x

கடலூரில் பரபரப்பு... | ஒரே பள்ளியில் அடுத்தடுத்து... மாணவன், மாணவி தற்கொலை முயற்சி

கிழக்கு ராமாபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த நிலையில், திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர், அந்த மாணவரை ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து, அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரும் விஷம் அருந்தியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் காதலித்து வந்ததாகவும், மாணவி தோல் வியாதியால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்ய கொள்வதாக, அந்த மாணவனிடம் ஏற்கனவே கூறியதாகவும் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்