வீட்டை விட்டு வெளியேறிய மகள் - "அண்ணன் மனைவி தான் காரணம்" - அண்ணியின் கழுத்தை அறுத்த கொழுந்தன்

x

சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவரின் மகள், வீட்டை விட்டு வெளியேறி, காதலித்து வந்து நபரை, திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பான புகாரின் பேரில், திருமணம் செய்த ஜோடியை, காவல்நிலையம் அழைத்து விசாரணை நடத்திய நிலையில், பெண்ணின் விருப்பப்படி, அவரை கணவனின் வீட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனிடையில் தனது மகள் காதல் திருமணம் செய்து கொள்வதற்கு, தனது அண்ணனின் மனைவி சாந்திதான் காரணம் எனக் கருதிய கருணாநிதி, ஆத்திரத்தில் அவரது கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இந்த கொலை சம்பவத்தில் தப்பியோடிய கருணாநிதியை போாலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்