தமிழகத்தை உலுக்கிய குன்னுர் விபத்து..கணவன்,மகள் இறந்த சோகம்நிர்கதியாய் நிற்கும் மனைவி..

x

புது வீடு கட்டி குடியேற சில நாட்களே இருக்கும் நிலையில், குன்னூர் பேருந்து விபத்தில் தந்தை - மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர் கீழ கடையம் பகுதியில் புதிய வீட்டை கட்டிவரும் நிலையில், தனது மனைவி, மகள், பேத்தியுடன் சுற்றுலா சென்றுள்ளார். இதனையடுத்து பேருந்து விபத்தில் சிக்கியதில் இளங்கோ மற்றும் அவரது மகள் கவுசல்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். புது வீட்டில் குடியேற சில நாட்களே இருந்த நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்