வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட தியாகியை நேரில் சந்தித்து கௌரவித்த ஆட்சியர்

x

காரைக்காலில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட தியாகியை, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேரில் சந்தித்து கௌரவித்தார். காரைக்கால் மாவட்டம், திருவேட்டகுடியில் வசிக்கும் தியாகி ராமச்சந்திரனுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் நினைவுப் பரிசை அனுப்பி இருந்தது. அந்த பரிசினை ஆட்சியர் குலோத்துங்கன் தியாகியின் வீட்டுக்குச் சென்று வழங்கி கௌரவித்தார். 96 வயதாகும் தியாகி ராமச்சந்திரன், கலகலப்பாக பேசி, உற்சாகத்துடன் தனது சுதந்திர போராட்ட நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்