ஓட்டும் போதே டிரைவரை அடித்ததால் தாறுமாறாக பறந்து விபத்தான அரசு பஸ்.. நொறுங்கிய 3 கார், 7 பைக்

x

ஆவடி அருகே அரசுப்பேருந்து ஓட்டுநரை தாக்கியதால், அடுத்தடுத்து 10 வாகனங்கள் மீது பேருந்து மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இருந்து கீழ் கொண்டையார் பகுதிக்கு, பயணிகளுடன் அரசுப்பேருந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆட்டோவுக்கு வழிவிடாததால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர், பேருந்தை முந்திச்சென்று மர்மநபர்களுடன் ஏறி, பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் நின்றிருந்த 3 கார்கள், 7 இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்தால் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படாத நிலையில், ஆட்டோ ஓட்டுநர் தாக்கியதால் அரசுப்பேருந்து ஓட்டுநர் தலையில் பலத்த காயம் அடைந்தார். பின்பு பேருந்து ஓட்டுநர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், தப்பிச்சென்ற நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்