முன்விரோதத்தால் அரங்கேறிய கொடூரம்..!நண்பர்களுடன் சேர்ந்து நடத்திய வெறியாட்டம்..பெரம்பலூரில் பயங்கரம்

x

பெரம்பலூர் அருமடல் பிரிவு ரோடு அருகே எலக்டீரிசியனாக பணிபுரிந்து வந்த சுபாஷ் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், பாலாம்பாடி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவருக்கும், சுபாஷுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, நண்பர்களான கிரீஸ்குமார் மற்றும் சரத் ஆகியோர் உதவியுடன் சுபாஷை அடித்துக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதில், குமார் மற்றும் கிரீஸ்குமாரை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள சரத் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்